9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறப்பு!

 

9 மற்றும் 11 ஆம் வகுப்பு  மாணவர்களுக்கு இன்று பள்ளிகள்  திறப்பு!

திட்டமிட்டபடி 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.

9 மற்றும் 11 ஆம் வகுப்பு  மாணவர்களுக்கு இன்று பள்ளிகள்  திறப்பு!

கொரோனா காரணமாக தமிழகத்தில் பல மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவெடுத்தது. இதையடுத்து பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. பள்ளிகள் தீர்ப்புக்கு பெரும்பாலான பெற்றோர் சம்மதம் தெரிவித்த நிலையில் கடந்த 19ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. இதற்குமிக முக்கிய காரணம் பொதுத்தேர்வுகள் நெருங்கி வருவது தான். இதனால் கொரோனா தடுப்பு நெறிமுறைகள் உடன் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு செயல்பட்ட செயல்படுத்தப்பட்டு வருகிறது.

9 மற்றும் 11 ஆம் வகுப்பு  மாணவர்களுக்கு இன்று பள்ளிகள்  திறப்பு!

இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. ஏற்கனவே 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை திங்கள் முதல் சனிக்கிழமை வரை வாரத்தில் 6 நாட்கள் வகுப்புகள் செயல்படும். தனிமனித இடைவெளி, மாஸ்க் அணிதல் போன்றவற்றை மாணவர்களும், ஆசிரியர்களும் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.