தொடர் கனமழை எதிரொலி: புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை

 

தொடர் கனமழை எதிரொலி: புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை

புதுச்சேரியில் தொடர் மழை காரணமாக 10,11,12ஆம் வகுப்புகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்துவருகிறது. குறிப்பாக புதுச்சேரியில் பெய்து வரும் அதிதீவிர கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்தது. அத்துடன் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது, புதுச்சேரி, காலாபேட், கனகசெட்டிகுளம், வில்லியனூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குடியிருப்புக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளதால், புதுச்சேரி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர் கனமழை எதிரொலி: புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை

இந்நிலையில் தொடர் கனமழையின் காரணமாக புதுச்சேரியிலுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் ஒன்று முதல் 9 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை விடுமுறை ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தொடர் கனமழை விடாது பெய்துவருவதால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ள காரணத்தால் புதுச்சேரியில் நாளை 10,11,12ஆம் வகுப்புகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.