ஓரின சேர்க்கைக்கு பணிய மறுத்ததால் 13 வயது சிறுவனை கொலை செய்த இளைஞர்!
விழுப்புரம் மரக்காணம் அருகே ஆறாம் வகுப்பு மாணவன் கொலை செய்து புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மரக்காணம் அடுத்த நொச்சிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மகன் தேவன் ராஜ் (13). இவர் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 9 ஆம் தேதி முதல் தேவன் ராஜ் காணவில்லை என அவரது தந்தை மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 13 நாட்களுக்கு பிறகு தேவன் ராஜ் கொலை செய்து புதைக்கப்பட்டது காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த கலைமணி என்பவரின் மகன் அபினேஷ் (20). தேவன்ராஜை கொலை செய்தது தெரியவந்தது. ஓரின சேர்க்கைக்கு ஒத்துழைக்காததால் தேவன்ராஜை கொலை செய்து புதைத்ததாக அபினேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனையடுத்து தேவன்ராஜை புதைக்கப்பட்ட இடத்திற்கு சென்ற காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் வட்டாட்சியர் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து அவரது உடலை தோண்டி எடுத்து விசாரணை நடத்திவருகின்றனர்.