ஶ்ரீபெரும்புதூரில் கோவில் குளத்தில் மூழ்கி சிறுவன் பலி!

 

ஶ்ரீபெரும்புதூரில் கோவில் குளத்தில் மூழ்கி சிறுவன் பலி!

காஞ்சிபுரம்

ஶ்ரீபெரும்புதூர் அருகே கோயில் குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூரை சேர்ந்தவர் கோகுல கிருஷ்ணன். இவரது மகன் ரித்தீஷ் குமார் (15). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை ரித்தீஷ் குமார், தனது நண்பர்களுடன் அங்குள்ள தான்தோன்றி அம்மன் கோவில் குளத்திற்கு குளிக்க சென்றார்.

ஶ்ரீபெரும்புதூரில் கோவில் குளத்தில் மூழ்கி சிறுவன் பலி!

குளத்தில் இறங்கி குளித்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்ற ரித்தீஷ், நீரில் மூழ்கினார். இதனை கண்டு, அருகில் இருந்தவர்கள் குளத்தில் இறங்கி தேடினர். சுமார் 1 மணி நேர தேடலுக்கு பின் மயங்கிய நிலையில் சிறுவனை மீட்டு, சிகிச்சைக்காக ஶ்ரீபெரும்புதூர் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், ரித்தீஷ்குமார் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த ஶ்ரீபெருமபுதூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், இதுகுறித்து கோகுல கிருஷ்ணன் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.