செப்.6 ஆம் தேதி முதல் 6- 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு

 

செப்.6 ஆம் தேதி முதல் 6- 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு

கொரோனா பரவல் குறைந்துவருவதால் பல்வேறு மாநிலங்கள் மீண்டும் பள்ளி, கல்லூரிகளைத் திறந்துள்ளன. ஆனால் மூன்றாம் அலையால் குழந்தைகள் பாதிக்கப்படலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்துவருவதால் தமிழ்நாடு போன்ற ஒருசில மாநிலங்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன.

செப்.6 ஆம் தேதி முதல் 6- 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு

தமிழ்நாட்டில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவதாக சொல்லப்பட்டுள்ள நிலையில், இன்னும் உறுதிபட தெரிவிக்கவில்லை. தமிழ்நாட்டைப் போன்று புதுச்சேரி அரசும் செப்டம்பர் 1ஆம் தேதி திறப்பதாக அறிவித்துள்ளது. கர்நாடகாவில் ஏற்கனவே 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை செப்டம்பர் ஆறாம் தேதி முதல் வகுப்புகள் துவங்க கர்நாடக அரசு அனுமதி அளித்துள்ளது. மாநிலம் முழுவதும் வைரஸ் பரவல் குறைவாக உள்ள பகுதிகளில் மட்டும் பள்ளிகள் வாரத்தில் 5 நாட்களுக்கு மட்டும் திறக்கவும், ஒரு நாள்‌ விட்டு ஒரு நாள் மட்டும் மாணவர்கள் வகுப்பில் பங்கேற்றால் போதும் எனவும் அம்மாநில பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சமூக இடைவெளி பின்பற்றி, முக கவசம் அணிந்து, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி பள்ளிகளுக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.