’கோபம் காதை மறைக்கும்’ பிக்பாஸ் வீட்டின் புதுமொழி’ கலாய்த்த கமல்

 

’கோபம் காதை மறைக்கும்’ பிக்பாஸ் வீட்டின் புதுமொழி’ கலாய்த்த கமல்

சனிக்கிழமை எப்பிசோட். பிக்பாஸ் ஹவுஸ்மேட் கமல் தரிசனத்திற்காகக் காத்திருக்கும் நாள். ‘சாட்டர் டே பேசிக்கலாம்.. சாட்டர் டே பேசிக்கலாம்…’ என பல பஞ்சாயத்துகளில் மிரட்ட உதவும் நாள் இது. குறிப்பாக, ஆரி, ஷனம் இந்த நாளை வெகுவாக எதிர்பார்ப்பார்கள். சில முடிச்சுகள் அவிழும் நாள். ஒருநாளின் நிகழ்ச்சியை நமக்கு 45-50 நிமிடங்களில்தான் தினசரி எப்பிசோட்டில் காட்டுவார்கள். அதில் நமக்குப் புரியாத சில விஷயங்களை விளக்கும் எப்பிசோட்டாகவும் சனிக்கிழமைகள் அமையும். ஆனால், இந்த வாரமும் அப்படியான சுவாரஸ்யங்கள் இருந்தன. குறிப்பாக, அட்டைக்கத்தி விஷயம். அதை கட்டுரையில் பார்ப்போம்.

வெள்ளிகிழமை

’கோபம் காதை மறைக்கும்’ பிக்பாஸ் வீட்டின் புதுமொழி’ கலாய்த்த கமல்

‘டங்காமாரி ஊதாரி’ எனும் துள்ளலிசையை மிதக்க்க விட்டார் பிக்கியின் தம்பி. சம்யுக்தா, ரம்யா, ஷிவானி என குரூப்பிஸ நடனத்தைப் பார்க்க முடிந்தது. மறுபக்கம் பாலா டைனிங் டேபிளில் ஏறி ஆடிட்டு இருந்தார். அந்தப் பாட்டு முடிவதற்கு நாளே முடிவடைந்ததுபோல ஓரிரு காட்சிகளோடு வெள்ளிக்கிழமை காட்சிகள் முடிந்தன.

வெள்ளிக்கிழமை இறுதிக்காட்சியாக, ஆரியும் அனிதாவும் எதிரெதிரே உட்கார்ந்து சீரியஸாகப் பேசிட்டு இருந்தார். ‘அணத்துறதுன்னா… சீக்கிரம் அணத்துங்க’ என்பதுபோல சேரில் சுருண்டு கிடந்தார் அனிதா. அந்தத் தோரணையே ஆரியை பேச விடாமல் செய்தது. இடையிடையே ‘முடிஞ்சிட்டா… முடிஞ்சிட்டா’னு கேட்டுட்டே இருந்தார். ஒருகட்டத்தில் ஆரி ’முடிஞ்சிட்டு’னு சொன்னதும் வீறுகொண்டு எழுந்து, படபடவென தம் கருத்துகளைப் பேச ஆரம்பித்தார். பாத்ரூம், எலுமிச்சைப் பழம் என பழைய பஞ்சாயத்துகள் பேசப்பட்டன. பெரியளவில் சுவாரஸ்யமானதாக இல்லை. ’நான் இந்த வாரம் போய்டுவேன்’ என மேஜையில் படர்ந்திருந்த பனியில் ஸாரி என எழுதினார். அதெல்லாம் போகமாட்டே என நம்பிக்கை கொடுத்தார் ஆரி.

சனிக்கிழமை

கமல்ஹாசனுக்கான பிக்பாஸ் காஸ்டியூமர் எப்பவுமே அசத்துபவர். இன்றுமே கமல் சூப்பரான காஸ்டியூமில் வந்தார். காலம் கணிப்பது பற்றிய சின்ன விளக்கத்தோடு பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றார்.

’கோபம் காதை மறைக்கும்’ பிக்பாஸ் வீட்டின் புதுமொழி’ கலாய்த்த கமல்

’தண்ணீர் பிடிக்க குழாயடி சண்டை நல்லா இருந்துச்சு’ என அர்ச்சனா, நிஷாவைப் பாராட்டியவர். நிஜத்தில் அந்தச் சண்டைக்குப் பின் உள்ள யதார்த்தத்தையும் வலியையும் பதிவு செய்தார்.

எம்.ஜி.ஆராக நடித்த ரியோவுக்குப் பாராட்டு கிடைத்தது. கூடவே, ‘சகலகலா வல்லவன்’ படத்தில் டூப் இல்லாமல் நடித்து முகத்தை கிழித்துக்கொண்டதற்காக எம்.ஜி.ஆர். சத்தம் போட்ட அனுபவத்தையும் கமல் பகிர்ந்துகொண்டார். அதேபோல, எம்.ஆர்.ராதாவாக நடித்த அனிதாவுக்கும் பாராட்டு கிடைத்தது. மேலும், அந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பிறகு, எம்.ஜி.ஆர் – எம்.ஆர்.ராதா இருவரும் ஒரு திருமணத்தில் அருகருகே அமர்ந்து பேசிட்டு இருந்ததைச் சொன்னார் கமல்.

’கோபம் காதை மறைக்கும்’ பிக்பாஸ் வீட்டின் புதுமொழி’ கலாய்த்த கமல்

 3 மணி நேரத்தைக் கணிக்க 1 நிமிடம் மட்டுமே அதிகம் எடுத்துக்கொண்ட ரியோ, ஆரி, கேபி குழுவுக்கும், வெற்றிப்பெற்ற அர்ச்சனா குழுவுக்கும் பாராட்டுகள் குவிந்தன. பாலாவுக்கு ரூல்ஸை ஒழுங்கா பின்பற்றச் சொல்லி ஒரு இடி இடித்தார். பாலா ஒழுங்கா ரூல்ஸை ஃபாலோ பண்ண என்ன செய்யலாம்? என மற்ற ஹவுஸ்மேட்ஸிடம் கேட்டார் கமல்.

ஒரு அட்வைஸ் சொன்ன ரம்யா, ‘இது கமல் சார் சொல்ற மாதிரி டிப்தான்’ என்றார். நேற்றைய எப்பிசோட் முழுக்க ரம்யா ஃபுல் ஃபார்மில் இருந்தார் போல. இப்படி அடிக்கடி ஏதாச்சும் பன்ச் அடிச்சிட்டே இருந்தார். ’டாஸ்கின் ரூல்ஸை புரிஞ்சு ஓவர் கம் பண்ண நினைக்காமல் சாதாரணமாக ஆடினாலே போதும்’ என ஆஜித்தின் கமெண்ட்டுக்கு கமல் பாராட்டும் கிடைத்தது.

’கோபம் காதை மறைக்கும்’ பிக்பாஸ் வீட்டின் புதுமொழி’ கலாய்த்த கமல்

இதில் ஒரு பிரச்சனை என்னன்னா, பாலாவை கண்டிக்கிறது எல்லாம் நடக்குது. ஆனா, அடுத்த சில நிமிடங்களில் அவருக்கு பாராட்டும் நடக்குது. பாராட்டும்போது சொல்லும் ஒரு வார்த்தையை அவர் எடுத்துக்கொண்டு கண்டித்ததை மறந்துவிடுகிறார் என்பதே. நேற்றும் அப்படித்தான் நடந்தது. அவர் ரூல்ஸை பிரேக் பண்றதுன்னா, அவர் டீம்க்குமே சிக்கல் என்பதை அவர் புரிந்துகொள்வதே இல்லை.

’கோபம் காதை மறைச்சிடுச்சு’னு புது பழமொழியைத் தந்திருக்கீங்க ரியோ என கண்ணாடியை உடைச்சதைக் கண்டித்தார். மீண்டும் சகலகலா வல்லவன் உதாரணத்தை நினைவூட்டினார்.

ரகசியம் கேட்கும் தொப்பி விளையாட்டை ஆட ஆரம்பிச்சார் கமல். குக்கூ தொப்பியை மாட்டிக்கொண்டு எதிரே உள்ள அட்டையிலிருந்து ஒன்றை எடுத்து, அதில் இருப்பவரைப் பற்றிய ரகசியம் ஒன்றைச் சொல்ல வேண்டும். யாராவது யாரைப் பற்றியாவது கொளுத்தி போடுவார்கள் என்று கணக்குப் போட்டு வைத்திருந்தார் பிக்பாஸ். அவர் ஆசையில மண்ணை அள்ளிப் போடுவதானே ஹவுஸ்மேட்ஸ் வழக்கம்.

’கோபம் காதை மறைக்கும்’ பிக்பாஸ் வீட்டின் புதுமொழி’ கலாய்த்த கமல்

முதலில் வந்த ரியோவுக்கு ஷனம் போட்டோ உள்ள அட்டை வந்தது. ‘ஷனம் ஹியூமர் சென்ஸ் உள்ளவர்’எனும் மாபெரும் ரகசியத்தைச் சொன்னார். இப்படித்தான் ஒவ்வொருவரும் ‘யாருக்குமே (!) தெரியாத ரகசியங்களைச் சொல்லிட்டு இருந்தார்கள்.

ஆனாலும், அவர்கள் சொன்னதிலிருந்து சில ரகசியங்கள்:

இரவு 11 மணிக்கு மேல், டிவியில் ஒளிப்பரப்ப முடியாத ஜோக்ஸ் சொல்வாராம் சோம்ஸ்.

ஹெட் மஸாஜ் செய்தால்தான் தூக்கம் வருமாம் பாலாவுக்கு.  தினமும் இரவு அத்தானுக்கு கடிதம் எழுதுவாராம் நிஷா.

’கோபம் காதை மறைக்கும்’ பிக்பாஸ் வீட்டின் புதுமொழி’ கலாய்த்த கமல்

ஜப்பான் நாடு முழுவதும் சுற்றிப் பார்த்து, அதன் கலாச்சாரம், மனிதர்கள் என அனைத்தும் சம்யுக்தாவுக்கு தெரியுமாம். (இதை சுசி சொன்னபோது அப்பாடா… தலைக்கு வந்து ஹேர் பின்னோடு போச்சுனு நிம்மதியானாங்க)

தனக்குப் பிடித்தமானவர்களை ரியோ கிள்ளுவாராம்… சில சமயம் கடிப்பாராம். (இதைச் சொன்னதும் இதெல்லாம் பிசிக்கல் அஃப்பன்ஸில் வரும் என எச்சரித்தார் கமல். நான்கூட முன்கூட்டியே சொன்னேன் சார் என ரம்யா சொல்லி, ரியோ கொக்கு காட்டினார்)

’ஒரு ரகசியமே வரலையே’னு கமல் ஆதங்கப்பட்டுக்கொண்டே அடுத்த ஆயுதத்தை எடுத்தார். ‘காதல் கண்ணை மறைக்குது’னு சொன்னது யார்ன்னு தெரியாதே… என ஆரம்பிக்க, ஆரி நான்தான் கையைத் தூக்கிட்டார். அதை வைத்து சிறிதுநேரம் ஓட்டலாம் என பிக்பாஸ்க்கு பெருத்த ஏமாற்றம். வடை போச்சே!

’கோபம் காதை மறைக்கும்’ பிக்பாஸ் வீட்டின் புதுமொழி’ கலாய்த்த கமல்

பிரேக் விட்டு கமல் செல்ல, வீட்டுக்குள் பெரிய பூகம்பமே வெடிக்கும் என நினைத்தால், பாலா கூலாக அங்கும் நடந்திட்டு இருந்தார். ஆஜித்க்கு கேப்டன் டிப்ஸ் தந்திட்டு இருந்தார். இன்னொரு பக்கம் போய், ‘ஆரி லவ் மேரேஜ் பண்ணினவர்தானே… எப்படி இப்படி தப்பா ஜட்ஜ் பண்ணினார்’ என கேட்டுட்டு இருந்தார்.

பாலாவின் செயல்களை இரு விதமாகப் பார்க்கலாம். ஒன்று, பாலா விஷயங்களை நிதானமாகக் கையாளப் பழகிவிட்டார் என்றும், மற்றொன்று, இந்த விஷயம் பற்றி பேசினால், பல விஷயங்கள் விவாதிக்கப்படலாம். அது தனக்கும் ஷிவானிக்குமே ஆபத்து என்பதால் மெளனமாக இருந்துவிட்டார் என்றும் புரிந்துகொள்ளலாம். எப்படியோ இந்தப் பழிச்சொல்லியிருந்து ரியோ தப்பிவிட்டார்.

’கோபம் காதை மறைக்கும்’ பிக்பாஸ் வீட்டின் புதுமொழி’ கலாய்த்த கமல்

அடுத்த விளையாட்டை ஆரம்பித்தார் கமல். வலுவான போட்டியாளருக்கு குத்துச்சண்டை கையுறை. டொக்கு போட்டியாளருக்கு அட்டைக் கத்தி கொடுக்க வேண்டும். அதை விளக்கும்போதும் ‘விஞ்சும்’ என வார்த்தையைச் சொன்னார். அதற்கு ரம்யா அர்த்தம் கேட்க, ‘சரிங்க… தமிழ்லேயே சொல்லிடுறேன்… டஃப் கொடுக்கும்’ என சொன்னதும் சிரிப்பலைகள்.

அட்டைக் கத்திகள் நிஷாவுக்கு 5, பாலாவுக்கு 4, ரமேஷ்க்கு 3-ம் கிடைத்தன. கையுறைகள் பாலாவுக்கு 6, ரியோவுக்கு 4, ஆரிக்கு 3, சம்யுக்தா, ரம்யாவுக்கு தலா 1 எனக் கிடைத்தது.

ஜித்தன் ரமேஷ் மட்டுமே கையுறை, அட்டக்கத்தி இரண்டையுமே பாலாவுக்குக் கொடுத்தார். இந்த விளையாட்டின்மூலம் தன் மீதான கண்டிப்புகளை எளிதில் மறந்துவிடுவார். அதுதான் அவர் பலமும் பலவீனமும்.

’கோபம் காதை மறைக்கும்’ பிக்பாஸ் வீட்டின் புதுமொழி’ கலாய்த்த கமல்

பிரேக் முடிந்து வந்த கமல், ‘உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்று செக் பண்ணிக்கோங்க’என தகவல் சொன்னார். பிறகு அகத்திற்குள் நுழைந்தவர், ஆரி, ரியோ இருவரையும் எவிக்‌ஷனிலிருந்து விடுவிடுத்தார். மீதமுள்ளவள்ளவர்களை நாளை பார்த்துக்கொள்ளலாம் என விடைபெற்றார்.

அநேகமாக, இன்று சுசி ஆட்டத்திலிருந்து விடைபெற வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும்.