சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஜாமீன் மனு… 13ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம்!

 

சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஜாமீன் மனு… 13ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம்!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை நீதிபதி 13ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஜாமீன் மனு… 13ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம்!
சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த தந்தை, மகன் போலீஸ் காவலில் அடித்துக் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர் ஶ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் ஜாமீன் கோரி தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இன்று இந்த மனு காணொலி காட்சி மூலம் விசாரிக்கப்பட்டது. ஜாமீனில் விடுவிக்க அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை வருகிற 13ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஜாமீன் மனு… 13ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம்!தந்தை, மகன் கொலை வழக்கை தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர். சி.பி.ஐ விசாரணை நடத்த ஒப்புக்கொண்டு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது. இந்த நிலையில் ஜாமீனில் விடுவிப்பது சரியாக இருக்காது என்று அரசு தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது.