`மதுரை சிறையில் தனி வீடு; தேடி வரும் விருந்து சாப்பாடு!’- சாத்தான்குளம் போலீஸ் கைதிகள் சொகுசு வாழ்க்கை

 

`மதுரை சிறையில் தனி வீடு; தேடி வரும் விருந்து சாப்பாடு!’- சாத்தான்குளம் போலீஸ் கைதிகள் சொகுசு வாழ்க்கை

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் காவல் நிலையத்தில் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட போலீஸ் கைதிகள் 5 பேருக்கும் மதுரை மத்திய சிறையில் தனி வீடு வழங்கப்பட்டுள்ளதோடு, சாப்பாடு அவர்களை தேடி வருகிறது. சிறையில் அவர்கள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

`மதுரை சிறையில் தனி வீடு; தேடி வரும் விருந்து சாப்பாடு!’- சாத்தான்குளம் போலீஸ் கைதிகள் சொகுசு வாழ்க்கை

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்திவந்த பென்னிக்ஸ் அவரது தந்தை ஜெயராஜ் ஆகிய இருவரையும் விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்தில் வைத்து அடித்து கொலை செய்ததாக 5 காவல்துறையினர் மீது சிபிசிஐடி வழக்குபதிவு செய்தது. இதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேசன், பாலகிருஷ்ணன், ஏட்டு முருகன், காவலர் முத்துராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு தூத்துக்குடி பேரூரணியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.

`மதுரை சிறையில் தனி வீடு; தேடி வரும் விருந்து சாப்பாடு!’- சாத்தான்குளம் போலீஸ் கைதிகள் சொகுசு வாழ்க்கை

இந்த நிலையில், சிறையில் உள்ள கைதி ஒருவரால் தங்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி 5 போலீஸ் கைதிகளும் அங்கிருந்து மதுரை சிறைக்கு மாற்ற கோரினர். இதையடுத்து 5 பேரும் பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர். இந்த நிலையில், சொகுசான வசதிசெய்து கொடுப்பதற்காகவே பாதுகாப்பு குறைப்பாடு என கூறி 5 பேரையும் மதுரை மத்திய சிறைக்கு மாற்றி இருப்பதாக வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டி இருந்தனர்.

`மதுரை சிறையில் தனி வீடு; தேடி வரும் விருந்து சாப்பாடு!’- சாத்தான்குளம் போலீஸ் கைதிகள் சொகுசு வாழ்க்கை

இந்த நிலையில், மற்ற கைதிகளை போல சிறைக்குள் அடைக்கப்படாமல், கொரோனா முகாமில் தனிமைப்படுத்தி வைத்திருப்பது போல மத்திய சிறைக்குள் இருக்கின்ற வீடு ஒன்று கொலை வழக்கில் கைதான இந்த 5 போலீஸ் கைதிகளுக்கும் ஒதுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களுக்கு விருந்து சாப்பாடு வழங்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. தந்தை, மகனை கொன்றுவிட்டு சிறையில் இருக்கும் 5 காவலர்கள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவது பெரும் சர்ச்சையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.