சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு: கைதானவர்கள் சிறை மாற்றம்

 

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு: கைதானவர்கள் சிறை மாற்றம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தைச் சேர்ந்த தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் ஆகிய இருவரை சாத்தான்குளம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் சென்று அவர்களை தாக்கி கொடுமைப்படுத்தி கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்த நிலையில் அவர்கள் இருவரும் உயிரிழந்தது தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் சாத்தான்குளம் காவல் ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர், உதவி சார்பு ஆய்வாளராக இருந்த ரகு கணேஷ் , பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் முருகன் மற்றும் முத்துராஜ் ஆகிய 5 பேரை கைது செய்து தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவின் பேரில் தூத்துக்குடி மாவட்ட சிறையில் அடைத்துள்ளனர்.

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு: கைதானவர்கள் சிறை மாற்றம்

சம்பந்தப்பட்ட சிறையில் அவர்களுக்கு பாதுகாப்பு பிரச்சனை எழும் என்பதால் சிறைத்துறை நிர்வாகம் அவர்களை மதுரை மத்திய சிறைச்சாலைக்கு மாற்ற திட்டமிட்டுள்ளது. இது குறித்த தகவலையும் மதுரை மத்திய சிறை நிர்வாகத்திற்கு சம்பந்தப்பட்ட, தூத்துக்குடி மாவட்ட சிறையில் இருந்து தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக மதுரை மத்திய சிறை துரை காவல்துறையினர் உறுதிப்படுத்தினர். இதனைதொடர்ந்து சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரை சிறைக்கு மாற்றப்பட்டனர்.