சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை வேண்டும்! – ஐ.நா தலைவர் விருப்பம்

 

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை வேண்டும்! – ஐ.நா தலைவர் விருப்பம்

சாத்தான்குளத்தில் போலீஸ் கஸ்டடியில் தந்தை, மகன் அடித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா சபை தலைவர் ஆட்டானியோ குட்டரஸ் கூறியதாக ஐ.நா செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை வேண்டும்! – ஐ.நா தலைவர் விருப்பம்ஐ.நா சபையின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, இந்தியாவின் தமிழ்நாட்டில் கடந்த ஜூன் 19ம் தேதி கைது செய்யப்பட்ட தந்தை பி.ஜெயராஜ், மகன் ஜெ.ஃபெனிக்ஸ் போலீசாரின் சித்ரவதை காரணமாக உயிரிழந்து பற்றி ஐ.நா தலைவரின் கருத்து என்ன என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “இதுபோன்ற ஒவ்வொரு மரணம் தொடர்பாகவும் முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஐ.நா சபை தலைவர் ஆன்டானியோ குட்டரஸ் விரும்புகிறார்” என்றார்.

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை வேண்டும்! – ஐ.நா தலைவர் விருப்பம்இந்த மரணம் தொடர்பாக மனித உரிமை அமைப்புகள் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளன. மனித உரிமை கண்காணிப்பகத்தின் தெற்காசியவுக்கான இயக்குநர் மீனாட்சி கங்குலி கூறுகையில், “ஒரு நபரை கைது செய்வதற்கு முன்பு பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை நீதிமன்றம் பல முறை தன்னுடைய தீர்ப்புகளில் சுட்டிக்காட்டியுள்ளது.

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை வேண்டும்! – ஐ.நா தலைவர் விருப்பம்தமிழக போலீஸ் அதிகாரிகள் எந்த அளவுக்கு அதை மீறி நடந்துகொள்கிறார் என்பதை வெளிப்படுத்துவது மட்டுமின்றி அவர்களுக்கு யாராவது பாடம் நடத்த வேண்டும் என்பதைக் காட்டுகிறது” என்றார். தந்தை, மகன் கொலை வழக்கு பற்றி ஐ.நா சபை வரையில் பேசுவது இந்த வழக்கில் மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.