‘சசிகலாவின்’ ஆன்மீக பயணம்… ஸ்ரீரங்கம் கோவிலில் வழிபாடு!

 

‘சசிகலாவின்’ ஆன்மீக பயணம்… ஸ்ரீரங்கம் கோவிலில் வழிபாடு!

தமிழக அரசியல் களத்தில் முக்கிய புள்ளியாக திகழ்பவர் சசிகலா. முதல்வராக பதவியேற்கவிருந்த சசிகலா திடீரென சிறை செல்ல நேர்ந்ததால், பதவி ஈபிஎஸ் வசம் சென்றது. சசிகலா ஜெயிலுக்கு போனதுக்கு பிறகு, அவரையே கட்சியில் இருந்து நீக்கி ஆப்பு வைத்து விட்டார் ஈபிஎஸ். பதவி பறிபோனது மட்டுமல்லாமல் அதிமுகவில் இருந்து விலக்கப்பட்ட சோகத்திலேயே 4 ஆண்டுகள் சென்றுவிட்டன.

‘சசிகலாவின்’ ஆன்மீக பயணம்… ஸ்ரீரங்கம் கோவிலில் வழிபாடு!

பிப்ரவரி 7.. ஆம் இந்த தினத்தில் தான் சசிகலா மீண்டும் தமிழகத்தில் ரீ என்ட்ரி கொடுத்தார். அதிமுகவின் முட்டுக் கட்டைகளை மீறி, சசிகலாவை வரவேற்க அலைக்கடலென மக்கள் மக்கள் திரண்டது. தமிழகமே அன்று ஸ்தம்பித்து போனது. இப்படி மாஸ் என்ட்ரி கொடுத்த சசிகலா, அதிமுகவை ஆட்டிப் படைப்பார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக தான் அரசியலில் இருந்து விலகுவதாக திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் சசிகலா. ‘புலி பதுங்குவது பாய்வதற்கு தான் என்பது போல’.. சசிகலாவின் இந்த அறிவிப்புக்கு பின்புலத்தில் ஏதேனும் காரணம் இருக்கும் என்றே சொல்லப்படுகிறது.

‘சசிகலாவின்’ ஆன்மீக பயணம்… ஸ்ரீரங்கம் கோவிலில் வழிபாடு!

அரசியலில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்ட சசிகலா, ஆன்மீகப் பயணத்தை தொடங்கிவிட்டார். கடந்த 2 நாட்களுக்கு முன்னர் தஞ்சாவூரில் உள்ள குலதெய்வ கோவிலில் சசிகலா சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து, திருவிடைமருதூர் மகாலிங்கசாமி கோவிலில் பிரம்ஹத்தி தோஷ பரிகாரம் செய்தார். அங்கிருந்த மக்களுக்கு அன்னதானமும் வழங்கினார். இந்த நிலையில், திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் சசிகலா சாமி தரிசனம் செய்ததாக தகவல்கள் வெளியாகின்றன.

‘சசிகலாவின்’ ஆன்மீக பயணம்… ஸ்ரீரங்கம் கோவிலில் வழிபாடு!

அதிமுகவை இரட்டைத் தலைமையிடம் இருந்து மீட்டெடுக்க துடித்துக் கொண்டிருக்கும் சசிகலா, தற்காலிகமாக தான் அரசியலில் இருந்து ஓய்வு எடுத்திருக்கிறார். அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான சசிகலாவின் சட்ட ரீதியான போராட்டம் இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. டிடிவி தினகரனின் செய்தியாளர் சந்திப்புகளும் சசிகலா மீண்டும் அரசியலுக்கு வர வாய்ப்பு இருப்பதையே உணர்த்துகின்றன. இப்படி இருக்கும் சூழலில், சசிகலாவின் இந்த திடீர் ஆன்மீக பயணத்துக்கும் ஏதாவது காரணம் இருக்கும் என்றே அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள்..!