சசிகலா சாதராண வார்டுக்கு மாற்றப்பட்டார்!

 

சசிகலா சாதராண வார்டுக்கு மாற்றப்பட்டார்!

சசிகலா உடல்நிலை குறித்து விக்டோரியா மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சசிகலா சாதராண வார்டுக்கு மாற்றப்பட்டார்!

சொத்துகுவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா வரும் 27 ஆம் தேதி விடுதலையாக இருந்த நிலையில் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டார். இதனால் பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து சசிகலாவுக்கு ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதை தொடர்ந்து சசிகலா உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து அறிவித்து வருகிறது.

சசிகலா சாதராண வார்டுக்கு மாற்றப்பட்டார்!

இந்நிலையில் சசிகலா ஐசியூவில் சிகிச்சை பெற்றுவந்த சசிகலா பெங்களூரு மருத்துவமனையில் சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது. சசிகலாவுக்கு கொரோனா தொற்று குறைந்துள்ளது என பெங்களூரு மருத்துவமனை தெரிவித்துள்ளது. ரத்தத்தில் சர்க்கரை அளவு 205 ஆக அதிகரித்துள்ளதாக சசிகலாவுக்கு இன்சுலின் மருந்து செலுத்தப்படுகிறது. சசிகலா உடல்நிலை சீராக உள்ளது எனவும் உணவு உட்கொள்வதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சசிகலா எழுந்து உட்கார்ந்தாகவும், உதவியுடன் நடப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. சசிகலா சிகிச்சைக்கு ஒத்துழைப்பதாகவும், மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணிப்பதாகவும் விக்டோரியா மருத்துவமனை தனது அறிக்கையில் கூறியுள்ளது.