உடல்நலம் பெற உதவி செய்த மருத்துவர்களுக்கும், வாழ்த்திய உள்ளங்களுக்கும் நன்றி- சசிகலா

 

உடல்நலம் பெற உதவி செய்த மருத்துவர்களுக்கும், வாழ்த்திய உள்ளங்களுக்கும் நன்றி- சசிகலா

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து கடந்த 27ஆம் தேதி விடுதலையானார். இதனிடயே அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்துதலுக்குப் பிறகு இன்று சென்னை திரும்பினார். அவருக்கு பெங்களூருவில் இருந்தே அமமுகவினர் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்த வண்ணம் உள்ளனர்.

உடல்நலம் பெற உதவி செய்த மருத்துவர்களுக்கும், வாழ்த்திய உள்ளங்களுக்கும் நன்றி- சசிகலா

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் கத்திக்குப்பத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, “அனைவருக்கும் வணக்கம். என் உடல் பூரண நலம் பெற வேண்டி வாழ்த்திய அத்துணை நல்ல உள்ளங்களுக்கும் முதலில் நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன். உடல்நலம் பெற உதவி செய்த கர்நாடக மாநில அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் வேண்டி வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. தெய்வ அருளாலும், மக்கள் மனதில் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் என் அக்கா புரட்சித்தலைவி இதய தெய்வம் அம்மா அவர்களின் ஆசியாலும், நான் இந்த கொரோனாவிலிருந்து மீண்டு வந்திருக்கிறேன்” என பேசினார்.