டிடிவி தினகரனுக்கு சசிகலா போட்ட உத்தரவு : ஷாக் ஆன அமமுகவினர்!

 

டிடிவி தினகரனுக்கு சசிகலா போட்ட உத்தரவு : ஷாக் ஆன அமமுகவினர்!

சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வந்த சசிகலா அரசியலில் பங்கேற்காமல் விலகியே இருந்து வந்தார். அதிமுக பொதுச் செயலாளர் பதவியை மீட்டெடுக்கும் சட்டப்போராட்டம் மட்டுமே தொடர்ந்தது. அதிமுகவினர் சசிகலாவை கண்டுகொள்ளவில்லை. அதிமுகவை எதிர்த்து சசிகலா வழிகாட்டுதலில் அமமுக போட்டியிட்டால் அதிமுகவின் வாக்குகள் சிதறும் என்பது உறுதி. இதனால், சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து பாஜக தலைமை அதிமுகவுக்கு வலியுறுத்தியது.

டிடிவி தினகரனுக்கு சசிகலா போட்ட உத்தரவு : ஷாக் ஆன அமமுகவினர்!

இந்த சூழலில் தான், அரசியலில் இருந்து விலகப்போவதாக சசிகலா திடீர் அறிவிப்பை வெளியிட்டார். ஜெயா டிவிக்கு தான் முதல் அறிக்கை போனது. இது அதிமுக – பாஜக இடையேயான தொகுதி பங்கீட்டில் இழுபறியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், தினகரனையும் அரசியலில் இருந்து விலக்க பாஜக காய் நகர்த்திக் கொண்டிருக்கிறது. சசிகலாவின் அறிக்கையை பார்த்து பதறிப்போய், உடனே அவரை சந்திக்க சென்றார் டிடிவி.

டிடிவி தினகரனுக்கு சசிகலா போட்ட உத்தரவு : ஷாக் ஆன அமமுகவினர்!

சுமார் 30 நிமிடம் நீடித்த அந்த சந்திப்பில், நீயும் அரசியலில் இருந்து விலகினால் பிரச்னைகள் இருக்காது என சசிகலா தினகரனுடன் கூறியிருக்கிறார். இது தினகரனை அதிர வைத்துள்ளது. சசிகலாவின் பேச்சைக் கேட்டு கடுப்பான தினகரன், அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம்.

அறிக்கையை கொடுக்க வேண்டாம் என தினகரன் பலமுறை கோரிக்கை விடுத்தும் அதை ஏற்காமல் அறிக்கையை கொடுத்து விட்டாராம். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், சசிகலா தன்னையும் அரசியலை விட்டு விலகச் சொன்னதை சொல்லாமல் மழுப்பி விட்டுச் சென்றார். இது அமமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.