“எம்ஜிஆர் மரணம்” ரஜினிகாந்த் தான் எங்களை உள்ளே விட சொன்னார் ; சசிகலா உடைத்த உண்மை!

 

“எம்ஜிஆர் மரணம்”  ரஜினிகாந்த் தான் எங்களை உள்ளே விட சொன்னார் ;  சசிகலா உடைத்த உண்மை!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா விடுதலையானதும் தமிழக அரசியலில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும் என பலரும் கருத்து தெரிவித்தனர். சசிகலா மீண்டும் அதிமுகவை கைப்பற்றுவார் என்று அரசியல் நோக்கர்கள் கூறிவந்த நிலையில் அதற்கு தலைகீழாக அனைத்தும் நடந்தேறியது. சசிகலாவை கட்சியில் சேர்த்துக் கொள்ள மாட்டோம் என அதிமுக இரட்டை தலைமை பிடிவாதமாக இருந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் நெருக்கத்தினால் தான் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்வதாக சசிகலா அறிவித்தார்.

“எம்ஜிஆர் மரணம்”  ரஜினிகாந்த் தான் எங்களை உள்ளே விட சொன்னார் ;  சசிகலா உடைத்த உண்மை!

சசிகலாவின் இந்த அறிவிப்புக்கு பின்னணியில் அதிமுகவின் தோல்வி முகமே தென்பட்டது. இதையடுத்து சசிகலா மீண்டும் அதிமுகவை கைப்பற்றும் இலக்கை நோக்கி பயணிக்க தொடங்கியுள்ளார். இதன் ஒரு அங்கமாக அதிமுக தொண்டர்கள் மத்தியில் சசிகலா தொலைபேசியில் உரையாடி வரும் ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. ஆனால் சசிகலாவுடன் தொலைபேசியில் பேசி வரும் அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகளை இரட்டை தலைமை அதிரடியாக கட்சியிலிருந்து நீக்கி வருகிறது.இத்தகைய பரபரப்பு சூழல்களுக்கு மத்தியில் வி.கே. சசிகலா தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

“எம்ஜிஆர் மரணம்”  ரஜினிகாந்த் தான் எங்களை உள்ளே விட சொன்னார் ;  சசிகலா உடைத்த உண்மை!

அதில் உங்களைப் போயஸ் தோட்ட வாசியாக மாற்றிய தினம் எம்ஜிஆர் மறைந்ததற்கு அடுத்த தினமான டிசம்பர் 25 1987 அன்று என்ன நடந்தது? என நிருபர் கேட்ட கேள்விக்கு, “எம்ஜிஆர் மறைந்த செய்தியை நான் தான் அக்காவிடம் தொலைபேசியில் தெரிவித்தேன். அக்கா அதிர்ச்சி அடைந்து மௌனமாக இருந்தார். அதையடுத்து நாங்கள் ஒரு காரை வரவழைத்து நான் ,அக்கா ,தினகரன் ஆகியோர் போயஸ் தோட்டத்தில் இருந்து ராமாவரம் தோட்டத்திற்கு சென்றோம். அங்கு எங்களை உள்ளே விட மாட்டோம் என்று கூறி கேட்டை பூட்டினர். உடனே நான் காரை பின்னால் எடுத்து வேகமாக ஓட்டிச்சென்று கேட்டை உடைத்து செல்லுமாறு டிரைவரிடம் கூறினேன். நாங்கள் காரை வேகமாக எடுத்துச் செல்வதை பார்த்து விட்டு உடனடியாக கேட் திறக்கப்பட்டது. நானும் அக்காவும் உள்ளே சென்றோம்.

“எம்ஜிஆர் மரணம்”  ரஜினிகாந்த் தான் எங்களை உள்ளே விட சொன்னார் ;  சசிகலா உடைத்த உண்மை!

அப்போது அங்கே முன்னாள் அமைச்சர் ராஜாராம், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் இருந்தனர். எங்களைப் பார்த்ததும் ரஜினிகாந்த் அவர்களை உள்ளே விடுங்கள் என்று கூறினார் . உடனே நான் அவளை திரும்பி பார்த்தேன். அப்போது தான் அவரை நான் முதல் முறையாக நேரில் பார்த்தேன். நாங்கள் உள்ளே சென்றோம் . சில பெண்கள் மட்டும் அழுது கொண்டிருந்தார்கள். ஆனால் தலைவரின் உடல் உள்ளே இல்லை. வெளியில் இருந்த வேனில் தலைவரின் தொப்பி தென்பட்டது. உடனே நான் அது குறித்து அக்காடம் தெரிவித்தேன். நாங்கள் வேனில் உள்ள தலைவரைப் பார்க்க செல்வதற்குள் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டது. தலைவர் எம்ஜிஆரின் உடலை இறுதி மரியாதைக்காக ராஜாஜி ஹாலுக்கு எடுத்து சென்றனர். இதனால் நாங்கள் அங்கே சென்றோம். என் கணவர் அங்கே நாங்கள் உடலை பார்ப்பதற்காக ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். ராஜாஜி ஹாலுக்கு சென்று அக்கா தலைவரின் தலைமாட்டில் நின்றார்; நானும், தினகரனும் அக்காவுடன் இருந்தோம் ” என்றார்.