மருத்துவமனையில் இருந்து, மீண்டும் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார் சசிகலா!

 

மருத்துவமனையில் இருந்து, மீண்டும் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார் சசிகலா!

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனையை அனுபவித்து வரும் சசிகலாவுக்கு திடீர் என்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அவர் சக்கர நாற்காலியில் அமர வைக்கப்பட்டு பெங்களூரு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். சசிகலாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் மருத்துவர்கள் அறிவுரைப்படி, சசிகலா பெங்களூரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மூச்சுத்திணறலுடன், இருமல் மற்றும் லேசானா காய்ச்சலும் இருப்பதால் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

மருத்துவமனையில் இருந்து, மீண்டும் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார் சசிகலா!

பெங்களூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு முதல்கட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது. கொரோனா ஆன்டிஜென், ராபிட் கிட் பரிசோதனையில் நெகட்டிவ் என வந்ததையடுத்து பெங்களூரு அரசு மருத்துவமனையில் இருந்து, மீண்டும் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார் சசிகலா.

சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 2017 ஆம் ஆண்டு கைதான சசிகலா, இளவரசி, சுதாகர் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து வரும் 27 ஆம் தேதி விடுதலை ஆகவுள்ளார்.