பாடகர் எஸ்பிபியின் உடல்நிலை எப்படி இருக்கிறது? மகன் சரணின் பதில்!

 

பாடகர் எஸ்பிபியின் உடல்நிலை எப்படி இருக்கிறது? மகன் சரணின் பதில்!

பாடகர் எஸ்பிபியின் உடல்நிலை சீராக இருப்பதாக அவரது மகன் சரண் தெரிவித்துள்ளார்.

உலகையே உலுக்கி எடுத்து வரும் கொரோனா வைரஸால் பிரபல பாடகரான எஸ்பி பாலசுப்பிரமணியமும் பாதிக்கப்பட்டார். இதனால் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் தனது உடல்நிலை சீராக இருப்பதாகவும் யாரும் பயப்பட வேண்டாம் என்று அவரே வீடியோ வெளியிட்டார். ஆனால் நாட்கள் போக போக அவரது உடல்நிலை மோசமடைந்து, செயற்கை சுவாசம் அளிக்கும் அளவுக்கு வந்து விட்டது.

பாடகர் எஸ்பிபியின் உடல்நிலை எப்படி இருக்கிறது? மகன் சரணின் பதில்!

இதனையடுத்து அவர் மீண்டு வர வேண்டும் என சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என அனைவரும் பிரார்த்தனை செய்தனர். இசை அவரை நிச்சயம் மீட்டு கொண்டு வரும் என அவரது ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்ததை போலவே அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்தது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.

பாடகர் எஸ்பிபியின் உடல்நிலை எப்படி இருக்கிறது? மகன் சரணின் பதில்!

தனது சகோதரியுடன் அப்பாவை பார்க்க சென்ற போது எஸ்பிபி, சகோதரியை பார்த்து மகிழ்ச்சி அடைந்ததாக எஸ்பிபியின் மகன் சரண் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், எஸ்பிபியின் உடல்நிலை சீராக இருப்பதாக அவரது மகன் சரண் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், தனது தந்தையின் உடல்நிலை மெல்ல முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.