நாட்டுக்கு தேவைப்படும்போதெல்லாம் சிவ சேனா இந்துத்துவாவின் வாளை பயன்படுத்தும்…. சிவ சேனா

 

நாட்டுக்கு தேவைப்படும்போதெல்லாம் சிவ சேனா இந்துத்துவாவின் வாளை பயன்படுத்தும்…. சிவ சேனா

நாட்டுக்கு தேவைப்படும்போதெல்லாம் சிவ சேனா இந்துத்துவாவின் வாளை பயன்படுத்தும் என்று சஞ்சய் ரவுத் தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் வழிபாட்டு தலங்களை திறக்கக்கோரி கடந்த மாதம் பா.ஜ.க. போராட்டம் நடத்தியது. இந்த நிலையில் மகாராஷ்டிரா அரசு அனுமதி அளித்ததையடுத்து கடந்த திங்கட்கிழமை முதல் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டன. இதனையடுத்து மதவழிபாட்டு தலங்களை மீண்டும் திறப்பது இந்துத்துவாவின் வெற்றி என்று பா.ஜக. தெரிவித்தது.

நாட்டுக்கு தேவைப்படும்போதெல்லாம் சிவ சேனா இந்துத்துவாவின் வாளை பயன்படுத்தும்…. சிவ சேனா
சஞ்சய் ரவுத்

இதனால் பா.ஜ.க.வுக்கும், சிவ சேனாவுக்கும் வார்த்தை போர் நடைபெற்று கொண்டு இருக்கிறது. இந்த சூழ்நிலையில் சிவ சேனாவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அந்த கட்சியின் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ரவுத் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: எந்தவொரு கட்சியிடமிருந்தும் எங்கள் இந்துத்துவா சான்றிதழ் பெற தேவையில்லை.

நாட்டுக்கு தேவைப்படும்போதெல்லாம் சிவ சேனா இந்துத்துவாவின் வாளை பயன்படுத்தும்…. சிவ சேனா
பா.ஜ.க.

நாங்கள் இருந்தோம், நாங்கள் இருக்கிறோம், நாங்கள் எப்போதும் இந்துத்துவாதியாக இருப்போம். நாங்கள் அவர்களை போல இந்துத்துவா அரசியலை விளையாடுவதில்லை. நாட்டுக்கு தேவைப்படும்போதெல்லாம் சிவ சேனா இந்துத்துவாவின் வாளை பயன்படுத்தும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.