நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்

 

நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்

பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்திற்கு கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் மும்பை லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனால் அவருக்கு முதற்கட்டமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு தொற்று இல்லை என முடிவானது.

நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்

இந்நிலையில் நடிகர் சஞ்சய் தத்திற்கு நுரையீரலில் புற்றுநோய் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நுரையீரல் புற்றுநோய் மூன்றாம் கட்ட நிலையில் உள்ளதால், அவர் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு செல்ல உள்ளார்.

நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்
இதனிடையே நடிகர் சஞ்சய் தத் தனது டிவிட்டர் பக்கத்தில், “நான் சில மருத்துவ சிகிச்சைக்காக பணியில் இருந்து ஓய்வு எடுத்து வருகிறேன். எனது குடும்பத்தினரும் நண்பர்களும் என்னுடன் இருக்கிறார்கள். எனது நலம் விரும்பிகள் கவலைப்பட தேவையில்லை. விரைவில் குணமடைந்து வீடு திரும்புவேன்” என்று பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.