பூரி கடற்கரையில் எஸ்.பி.பிக்கு மணல் சிற்பம்
Sep 25, 2020, 20:06 IST1601044619000
மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு அவரது ரசிகர்கள் பல்வேறு வகையில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேடை இசைக்கலைஞர்கள் இசைநிகழ்ச்சியின் மூலம் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கோவையை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த தங்க நகை பட்டறை தொழிலாளி யு.எம்.டி ராஜா, மெழுகுவர்த்தியில் எஸ்.பி.பி. ஓவியம் வரைந்து தனது அஞ்சலியை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மணற் சிற்ப கலைஞன் சுதர்சன், ஒடிசாவில் உள்ள பூரி கடற்கரையில் பாடும் பறவைக்கு எஸ்.பி.பிக்கு இரங்கல் சிற்பம் அமைத்துள்ளார்.