சமாஜ்வாடி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் காலமானார்!

 

சமாஜ்வாடி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் காலமானார்!

உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல் மந்திரியும் சமாஜ்வாடி கட்சியின் நிறுவனரும் ஆன முலாயம் சிங் யாதவ்(92) காலமானார்.

உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த இவர், கடந்த மே மாதம் லக்னோவில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வயிற்று வலியின் காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சமாஜ்வாடி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் காலமானார்!

அதனைத் தொடர்ந்து அண்மையில் கான்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார். இந்த நிலையில், நேற்று அவர் உ.பியின் அவுரியா மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரில் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மூன்று முறை உத்திர பிரதேச மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த முலாயம் , தனது வாழ்நாள் முழுவதும் விவசாயிகள், ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்களுக்காகவே பணியாற்றினார் என அவரது மகனும் சமாஜ்வாடி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.