அண்ணாமலையுடன் செல்பி… சேலம் தலைமை காவலர், ஆயுதப்படைக்கு மாற்றம்…

 

அண்ணாமலையுடன் செல்பி… சேலம் தலைமை காவலர், ஆயுதப்படைக்கு மாற்றம்…

சேலம்

அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலையுடன் செல்பி எடுத்த, சேலத்தை சேர்ந்த தலைமை காவலர் அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.

சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிபவர் குணசேகரன்.இவர் தாராபுரத்தில் பிரதமர் பங்கேற்ற பிரசார பொதுக்கூட்டத்திற்கு, பாதுகாப்பு பணிக்காக சென்றிருந்தார்.

அண்ணாமலையுடன் செல்பி… சேலம் தலைமை காவலர், ஆயுதப்படைக்கு மாற்றம்…

அப்போது, கூட்டத்தில் பங்கேற்ற அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலையுடன், செல்பி எடுத்துக்கொண்ட குணசேகரன், அதனை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இதுகுறித்து குணசேகரன் மீது அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சேலம் மாவட்ட எஸ்.பி., தீபா கனிகர் விசாரணை மேற்கொண்டார்.

விசாரணை முடிவில், சீருடையில் பணியில் இருந்தபோது, அரசியல் கட்சி வேட்பாளருடன் செல்பி எடுத்து விதிமீறலில் ஈடுபட்டதாக, குணசேகரனை ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி., உத்தரவிட்டார்.