சேலம்- “ஏற்காடு தனியார் எஸ்டேட்டில் மீண்டும் ஒரு கொலை “

 

சேலம்- “ஏற்காடு தனியார் எஸ்டேட்டில் மீண்டும் ஒரு கொலை “

சேலம் மாவட்டம் ஏற்காட்டில், தனியார் எஸ்டேட்டில் மீண்டும் ஒரு கொலை சம்பவம் நடந்துள்ளதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த 30-ம் தேதி ஏற்காடு தனியார் எஸ்டேட்டில் வேலை செய்துவந்த ஜார்கண்ட் மாநிலத்தை சார்ந்த கோண்டபாகன் சுதிகேன்ஸ் தம்பியினர் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.

சேலம்- “ஏற்காடு தனியார் எஸ்டேட்டில் மீண்டும் ஒரு கொலை “

இந்த வழக்கில் அதே எஸ்டேட்டில் பணியாற்றும், ஜார்கன் மாநிலத்தைச் சேர்ந்த முச்ரே 25, சுக்ராம் 22, ராம்சநாத் 35 ஆகிய மூவரை ஏற்காடு போலீசார் கைது செய்தனர். மூச்ரே சகோதர் புத்ராம் மற்றும் ஹைரா புத்ரே ஆகியோரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் அதே எஸ்டேட் அருகில் தற்போது ஒருவர் சடலமாக கிடப்பதை அறிந்த போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்- “ஏற்காடு தனியார் எஸ்டேட்டில் மீண்டும் ஒரு கொலை “

தற்போது இறந்து கிடப்பவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், முன்னர் நடைபெற்ற கொலை சம்பவத்தில் தேடப்பட்டு வந்தவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.