திடீர் திருப்பம்… மாஜி அமைச்சர் மணிகண்டனை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு!

 

திடீர் திருப்பம்… மாஜி அமைச்சர் மணிகண்டனை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு!

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னை ஏமாற்றியதாகவும், அந்தரங்கப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும், கட்டாய கருக்கலைப்பு செய்ததாக நடிகை அளித்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

திடீர் திருப்பம்… மாஜி அமைச்சர் மணிகண்டனை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு!

இந்த வழக்கில், முன்ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஜூன் 16ஆம் தேதியன்று தள்ளுபடி செய்தது. இதையடுத்து, மணிகண்டனை கைது செய்ய காவல் துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர். பெங்களூருவில் தலைமறைவாக இருந்த மணிகண்டனை காவல் துறையினர் கடந்த 20ஆம் தேதி கைது செய்தனர்.

திடீர் திருப்பம்… மாஜி அமைச்சர் மணிகண்டனை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு!

இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய மணிகண்டனை ஜூலை 2ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அடைக்க உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அங்கேயும் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த மணிகண்டனுக்கு, சொகுசு வசதிகள் கொடுக்கப்பட்டதாக கூறி இன்று காலை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.

திடீர் திருப்பம்… மாஜி அமைச்சர் மணிகண்டனை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு!

இதனையடுத்து, மணிகண்டனை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அடையாறு மகளிர் போலீசார், சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். இதற்காக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்பு மணிகண்டன் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி மோகனாம்பாள் முன்னிலையில் இந்த மனு விசாரணை செய்யப்பட்டது. அப்போது நீதிபதி மணிகண்டனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி மறுத்து மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.