சவால் விடும் சத்குரு! நாட்டைவிட்டே செல்கிறேன்…

 

சவால் விடும் சத்குரு! நாட்டைவிட்டே செல்கிறேன்…

காட்டுவாசிகளின் நிலத்தையோ, காடுகளின் நிலத்தையோ ஒரு இன்ச் நான் எடுத்து இருந்தேன் என்று நீங்கள் நிரூபித்தால் நான் நாட்டை சென்றுவிடுகிறேன் என சத்குரு ஜக்கி வாசுதேவ் சவால் விடுத்துள்ளார்.

Image

கடந்த சில நாட்களுக்கு முன் ஒன்றிய உயிரினங்கள் என்ற பெயரில் டைனோசர், சிங்கம், புலி உள்ளிட்ட விலங்குகள் பெயரில் ட்விட்டர் கணக்குகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில் காடுகளை அழித்து கட்டப்பட்ட, ஜக்கியின் சட்டவிரோத கட்டுமானங்களை இடிக்க வேண்டுமெனவும், காடுகளை ஜக்கி வாசுதேவ் ஆக்கிரமித்துவிட்டதாகவும் ஒன்றிய உயிரினங்கள் ட்விட்டரில் முனுமுனுக்க தொடங்கின. இதனிடையே வனநிலங்களை ஆக்கிரமிக்க தமிழக அரசு அனுமதிக்கவே கூடாது என சென்னை உயர்நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.

இதனால் ஒன்றிய உயிரினங்களின் அலப்பறை அதிகரிக்க தொடங்கியது. தாங்கள் வாழ்ந்த காடுகளை ஜக்கி வாசுதேவ் ஆக்கிரமித்துவிட்டார் எனக் கூறி #காடுஎங்கடாஜக்கி என்ற ஹேஷ்டேக்கை வைரலாக்கின.இந்த சூழலில் காட்டுவாசிகளின் நிலத்தையோ, காடுகளின் நிலத்தையோ ஒரு இன்ச் நான் எடுத்து இருந்தேன் என்று நீங்கள் நிரூபித்தால் நான் நாட்டை சென்றுவிடுகிறேன் என சத்குரு ஜக்கி வாசுதேவ் சவால் விடுத்துள்ளார்.