கொரோனாவிலிருந்து மீண்டார் சச்சின்!

 

கொரோனாவிலிருந்து மீண்டார் சச்சின்!

கடந்த மார்ச் 27ஆம் தேதி முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சினுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்றியப்பட்டது. இந்தத் தகவலை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் சச்சின். அதில், “நானே முன்வந்து கொரோனா பரிசோதனை செய்தேன். தற்போது எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. எனக்கு லேசான அறிகுறிகள் தென்படுகின்றன. வீட்டில் இருக்கும் மற்றவர்களுக்கு தொற்று ஏற்படவில்லை. அதனால் வீட்டிலேயே நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

கொரோனாவிலிருந்து மீண்டார் சச்சின்!

இச்சூழலில் அவருக்கு தொற்றின் வீரியம் அதிகமாக இருந்துள்ளது. இதனால் கடும் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார். இதையடுத்து அவர் மருத்துவர்கள் ஆலோசனைப்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தனக்காகப் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த அவர் விரைவில் வீடு திரும்புவேன் என்று கூறியிருந்தார். தற்போது அவர் கொரோனாவிலிருந்து முழுமையாகக் குணமடைந்துள்ளார். இதையடுத்து சச்சின் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குத் திரும்பினார்.

இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், “இப்போது தான் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினேன். கொரோனாவிலிருந்து மீண்டாலும் சில நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டிருக்கிறேன். எனக்காகப் பிரார்த்தனை செய்த அனைவருமும் நன்றி. நான் உங்களைப் பெரிதும் மதிக்கிறேன். என்னை மீட்டெடுத்த மருத்துவ ஊழியர்களுக்கு நான் கடமைப்பட்டுள்ளேன். ஒரு வருடத்திற்கும் மேலாக அவர்களின் பணி சிறப்புவாய்ந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.