ரூ.35 கோடி லஞ்சம் விவகாரம்.. காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு லீகல் நோட்டீஸ்.. சொன்னதை செய்த சச்சின் பைலட்..

 

ரூ.35 கோடி லஞ்சம் விவகாரம்.. காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு லீகல் நோட்டீஸ்.. சொன்னதை செய்த சச்சின் பைலட்..

ராஜஸ்தான் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கிரிராஜ் சிங் மலிங்கா கடந்த சில தினங்களுக்கு முன் செய்தியாளர்களிடம் சச்சின் பைலட் மீது பகீர் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். ராஜ்யசபா தேர்தலுக்கு முன் சச்சின் பைலட் என்னிடம் மாநிலங்களை தேர்தலில் காங்கிரஸ் போடாமல் இருக்க ரூ.35 கோடி தருவதாக கூறினார். ஆனால் நான் மறுத்து விட்டேன். மேலும் நான் உடனே இந்த தகவலை முதல்வர் அசோக் கெலாட்டிடம் தெரிவித்தேன் என கிரிராஜ் சிங் மலிங்கா தெரிவித்தார்.

ரூ.35 கோடி லஞ்சம் விவகாரம்.. காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு லீகல் நோட்டீஸ்.. சொன்னதை செய்த சச்சின் பைலட்..

சச்சின் பைலட் இந்த குற்றச்சாட்டை மறுத்தார். மேலும் அவர் கூறுகையில், இந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்த எம்.எல்.ஏ. மீது நான் பொருத்தமான மற்றும் கண்டிப்பான சட்ட நடவடிக்கைகளை எடுப்பேன். எனது பப்ளிக் இமேஜ் மீது அபத்தங்களை ஏற்படுத்த இது போன்ற குற்றச்சாட்டுக்ள என் மீது வீசப்படும் என என்று நான் நம்புகிறேன் என தெரிவித்தார்.

ரூ.35 கோடி லஞ்சம் விவகாரம்.. காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு லீகல் நோட்டீஸ்.. சொன்னதை செய்த சச்சின் பைலட்..

சச்சின் பைலட் சொன்ன மாதிரி தன் மீது குற்றம்சாட்டிய தனது கட்சி எம்.எல்.ஏ. கிரிராஜ் சிங் மலிங்காவுக்கு எதிராக சட்டப்பூர்வமான நடவடிக்கையை தொடங்கி விட்டார். ரூ.35 கோடி லஞ்சம் கொடுத்ததாக கூறிய குற்றச்சாட்டு தொடர்பாக கிரிராஜ் சிங்குக்கு சச்சின் பைலட் லீகல் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தற்போது ராஜஸ்தான் அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.