சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு!

 

சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக கோயில் நடை நாளை திறக்கப்படுகிறது.

கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நாளை நடை திறக்கப்படுகிறது. நாளை மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறக்கிறார். இதை தொடர்ந்து ஐயப்பனுக்கு தீபாராதனை காட்டப்படும்.

சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு!

வரும் 16ம் தேதி கார்த்திகை மாதம் பிறப்பதால் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். இதைத் தொடர்ந்து டிசம்பர் 26 ஆம் தேதி மண்டல பூஜையும், ஜனவரி 14ம் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெற இருக்கிறது. கொரோனா பரவல் அச்சத்தினால் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து சுவாமி தரிசனம் செய்யலாம் என கேரள அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் பம்பை ஆற்றில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கொரோனா தொற்று இல்லை என 48 மணிநேரத்திற்கு முன் எடுத்த சான்றிதழை காண்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு!

தினந்தோறும் ஆயிரம் பக்தர்களும், வார இறுதி நாட்களில் 2 ஆயிரம் பக்தர்களும், மகர விளக்கு பூஜையின் போது தினசரி 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என்று சபரிமலை தேவசம் போர்டு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.