ரஜினி அரசியலுக்கு வரலைனா என்ன? விஜய் இருக்கிறார்- எஸ்.ஏ.சந்திரசேகர்

 

ரஜினி அரசியலுக்கு வரலைனா என்ன? விஜய் இருக்கிறார்- எஸ்.ஏ.சந்திரசேகர்

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராதது நல்லதுதான் என நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

கடந்த 1996ஆம் ஆண்டு முதல் அரசியலுக்கு வருவதாக பரபரப்பை ஏற்படுத்தி வந்த ரஜினி, ஜனவரியில் கட்சி தொடங்கப்படும் என உறுதியளித்திருந்தார். ஆனால் தன்னுடைய உடல்நிலையை கருத்தில் கொண்டு அரசியலுக்கு வரவில்லை என்றும், கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாததற்கு மன்னிப்புக்கேட்டு கொள்வதாகவும் தெரிவித்தார். ரஜினியின் இந்த முடிவு ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது.

ரஜினி அரசியலுக்கு வரலைனா என்ன? விஜய் இருக்கிறார்- எஸ்.ஏ.சந்திரசேகர்

இந்நிலையில் நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தனியார் இணையதள செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “ரஜினியின் ரசிகராக அவர் அரசியலுக்கு வராததை நல்லது என நினைக்கிறேன். அரசியலுக்கு வரவில்லை என்றாலும், அவர் நடிப்பில் கவனம் செலுத்தி நல்லபடியாக இருக்க வேண்டும். அரசியலுக்கு வந்துதான் நடிகர்கள் சம்பாதிக்க வேண்டுமென்ற எண்ணமில்லை. அனைவரும் நடித்து சம்பாதித்தார்கள். மக்களுக்கு நல்லது நடிகர்கள், அரசியல் வெற்றிடத்தை நிரப்ப வேண்டும். ரஜினி இல்லையென்றால் என்ன? அரசியல் வெற்றிடத்தை நிரப்ப நிறைய இளைஞர்கள் இருக்கின்றனர். பதவி, பணத்தின் மீது ஆசையில்லாத இளைஞர்கள் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அரசியலுக்கு வர வேண்டும்” எனக் கூறினார்.