மயக்க நிலையில் இருந்து எஸ்.பி.பி. மீண்டுள்ளார்: மகன் சரண்

 

மயக்க நிலையில் இருந்து எஸ்.பி.பி. மீண்டுள்ளார்: மகன் சரண்

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியனுக்கு கடந்த 5ஆம் தேதி கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகினது. இதனால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவ நிர்வாகம் அறிவித்தது. இதையடுத்து தற்போது அவருக்கு எக்ஸ்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் எஸ்பிபி உடல்நலம் தேறி மீண்டு வர கூட்டு பிரார்த்தனை செய்தனர்.

மயக்க நிலையில் இருந்து எஸ்.பி.பி. மீண்டுள்ளார்: மகன் சரண்

இந்நிலையில் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், அவர் 90% மயக்க நிலையில் இருந்து எஸ்.பி.பி. மீண்டுள்ளதாகவும் அவரது மகன் சரண் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் விரைவில் தந்தை பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என நம்புவதாகவும் சரண் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.