பெருந்துறை ஒன்றியக்குழு உறுப்பினர் பதவி இடைத்தேர்தல்… அதிமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்!

 

பெருந்துறை ஒன்றியக்குழு உறுப்பினர் பதவி இடைத்தேர்தல்… அதிமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்!

ஈரோடு

பெருந்துறை ஒன்றியம் 10-வது ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் எஸ்.என்.பாலகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஒன்றியம் 10-வது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினராக பதவி வகித்த ஜெயக்குமார், கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, எம்எல்ஏ-வாக பொறுப்பேற்றார். அதனையடுத்து, 10-ஆவது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் பதவி காலி இடமாக அறிவிக்கப்பட்டது. தற்போது 9 மாவட்டங்களில் நடக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலை ஒட்டி பெருந்துறை தொகுதியில் காலியாக உள்ள 10-ஆவது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினருக்கான இடைத் தேர்தலிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெருந்துறை ஒன்றியக்குழு உறுப்பினர் பதவி இடைத்தேர்தல்… அதிமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்!

இதனை அடுத்து, 10-ஆவது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் வேட்பாளராக பொன்முடி ஊராட்சி சில்லாங்காடு கிளை செயலாளரான எஸ்.என்.பாலகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். நேற்று முன்தினம் முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன், பெருந்துறை எம்எல்ஏ எஸ்.ஜெயக்குமார் ஆகியோர் பொன்முடி, குள்ளம்பாளையம், மேட்டுப்புதூர், சீனாபுரம் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளுக்கு, வேட்பாளர் எஸ்.என்.பாலகிருஷ்ணனை அறிமுகம் செய்து வைத்தனர்.

இந்த நிலையில், இன்று மதியம் பெருந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமாரிடம், அதிமுக வேட்பாளர் எஸ்.என்.பாலகிருஷ்ணன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.