ஆஸ்கர் தமிழன் ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிராக பாலிவுட்டில் சதியா? லியோனி கண்டனம்

 

ஆஸ்கர் தமிழன் ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிராக பாலிவுட்டில் சதியா? லியோனி கண்டனம்

இரண்டு ஆஸ்கர் விருதுகள் வென்று இந்தியாவை நோக்கி உலகின் பார்வையைத் திருப்பியவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்

மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தில் அறிமுகமான ஏ.ஆர்.ரகுமான் கடும் உழைப்பிலும் நவீன இசைபாணியாலும் குறுகிய காலத்தில் இந்தியா முழுக்க புகழ்பெற்றார். இவர் இசையமைத்த இந்திப் படங்கள் பெரும் வெற்றிப் பெற்றன. அதனால், இந்திப் பட உலகம் ரகுமானை நோக்கி வந்தது.  பல படங்களுக்கு ரகுமான் இசைக்காகக் காத்துகிடந்தனர். இந்தச் சூழலில் ’ஸ்லம் டாக் மில்லியனியர்’ படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளைப் பெற்றார். விருது விழா மேடையில் ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’ என்று தமிழில் சொல்லி பேச்சைத் தொடங்கியவர்.

ஆஸ்கர் தமிழன் ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிராக பாலிவுட்டில் சதியா? லியோனி கண்டனம்

சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டு இறந்த இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் நடித்த கடைசிப் படமான ’தில் பேச்சாரா’ வுக்கும் இசை ஏ.ஆர்.ரகுமான் தான். ஓடிடியில் வெளியாகி பரவலாக வரவேற்பு பெற்றது இந்தப் படம். ஆனால், இந்தப் படத்தை ஒட்டி ஏ.ஆர்.ரகுமான் சொல்லியிருந்த கருத்து கடும் அதிர்ச்சியை அளித்தது.

ஆஸ்கர் தமிழன் ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிராக பாலிவுட்டில் சதியா? லியோனி கண்டனம்

தில் பேச்சாரா படத்தின் இயக்குநர் தன்னிடம் பேசுகையில், ‘உங்களை வைத்து இந்தப் படம் இசையமைக்க வேண்டாம் எனச் சிலர் தடுத்தார்கள் பாலிவுட்டில் சிலர் உங்களைப் பற்றி வதந்திகளைக் கிளப்புகிறார்கள்’ என்று கூறினார் என்று ஏ.ஆர். ரகுமான் தெரிவித்திருந்தார்.

ஏ.ஆர்.ரகுமான் கூறியது பெரும் விவாதத்தைக் கிளப்பியது. ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாகப் பலரும் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

ஆஸ்கர் தமிழன் ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிராக பாலிவுட்டில் சதியா? லியோனி கண்டனம்

பட்டிமன்றப் பேச்சாளரும் திமுகவைச் சேர்ந்தவருமான திண்டுக்கல் ஐ லியோனி, ஏ.ஆர். ரகுமானுக்கு எதிராக இந்தித் திரை உலகில் நடக்கும் சதியைக் கண்டித்துள்ளார்.

லியோனி தனது ட்விட்டர் பக்கத்தில், ’இரண்டு ஆஸ்கார் விருதுகள் பெற்ற தமிழன் ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிராக பாலிவுட்டில் சதியா..? உலக மக்களின் மனங்களை கடந்த இசைப்புயலுக்கு வேலியா..? இசைக்கடலுக்கு மூடியா..? இசை சூரியனே உன்னை வெறும் கரங்களால் மறைப்பதா..? கலங்காதே.. உலக இசைக்கூட்டம் உன்னை தாங்கிப் பிடிக்கும்’ என்று கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.