வாலாஜாபாத்தில் உரிய ஆவணமில்லாத ரூ.2.93 லட்சம் பறிமுதல்!

 

வாலாஜாபாத்தில் உரிய ஆவணமில்லாத ரூ.2.93 லட்சம் பறிமுதல்!

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அருகே உரிய ஆவணமின்றி வாகனத்தில் எடுத்துச்சென்ற 2 லட்சத்து 93 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

கஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த திருமுக்கூடல் பகுதியில் நேற்று தேர்தல் பறக்கும் படை அதிகாரி முனியாண்டி தலைமையிலான குழு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தது. அப்போது, அந்த வழியாக வந்த காரை மறித்து, அதிகாரிகள் சோதனையிட்டனர்.

வாலாஜாபாத்தில் உரிய ஆவணமில்லாத ரூ.2.93 லட்சம் பறிமுதல்!

இந்த சோதனையில் காரில் 2 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இது குறித்து வாகனத்தில் வந்த நபரிடம் அதிகாரிகள் விசாரித்ததில் அவர் காஞ்சிபுரத்தை சேர்ந்த நாகராஜன் என்பது தெரியவந்தது.

ஆனால் அவரிடம் பணத்திற்கான ஆவணங்கள் எதுவும் இல்லாததால் 2 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான ராஜலட்சுமியிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது.