சென்னைக்கு நூதன முறையில் கடத்திவந்த ரூ.89 லட்சம் தங்கம் பறிமுதல்!
சென்னை
துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணி நூதனமான முறையில் கடத்திவந்த ரூ.89 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
துபாயில் இருந்து நேற்று சென்னை வந்த எமிரேட்ஸ் விமானத்தில் வந்த பயணிகளிடம், சுங்க அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது, முகமது அஷ்ரப் என்ற பயணி மீது சந்தேகம் எழுவே, அவரை தனியே அழைத்துச்சென்று சோதனையிட்டனர்.
சோதனையின்போது, அவர் முழங்காலுக்கு கீழே காலில் பேண்டேஜூக்குள் மறைத்து தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து, அவரது கால்களில் 2 பேண்டேஜ்களில் இருந்த ரூ.1.80 கிலோ கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சர்வதேச மதிப்பு 89 லட்சத்து 17 ஆயிரம் ஆகும்.
தங்கம் கடத்தல் தொடர்பாக, முகமது அஷ்ரப்பை கைது செய்த சுங்கத்துறையினர், மேலும், அவரிடம் இருந்து தங்கத்தை பெற்றுச்செல்ல வந்த சென்னையை சேர்ந்த முகமது இப்ராஹிம் என்பவரையும் மடக்கிப் பிடித்தனர். தொடர்ந்து, அவர்கள் இருவரிடமும் சுங்கத்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.