‘ரூ.50 லட்சம் பணம் பறிமுதல்’ : சோதனைச்சாவடியில் சிக்கிய தொழிலதிபர்!

 

‘ரூ.50 லட்சம் பணம் பறிமுதல்’ : சோதனைச்சாவடியில் சிக்கிய தொழிலதிபர்!

தமிழக- கேரள எல்லையை ஒட்டியிருக்கும் குமுளியில் தற்போது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அங்கிருக்கும் சோதனைச் சாவடியில் வழக்கம் போல இன்று போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த கார் ஒன்றை நிறுத்திய போலீசார், சோதனை மேற்கொண்டனர். அதில், காரில் இருந்து சூட்கேஸில் கட்டுக் கட்டாக பணம் இருந்ததைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

‘ரூ.50 லட்சம் பணம் பறிமுதல்’ : சோதனைச்சாவடியில் சிக்கிய தொழிலதிபர்!

காரில் இருந்தவரிடம் நடத்திய விசாரணையில் ஏலக்காய் தோட்டம் வாங்கச் செல்வதாகவும், தான் கம்பம் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ராஜீவ் (33) என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், பணத்திற்கான எந்த ஆவணமும் அவரிடம் இல்லை என்பதை அறிந்த போலீசார், பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். இதையடுத்து ராஜீவை கைது செய்து, நீதிமன்றக் காவலில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணமும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.