தனியார் குடோனில் பதுக்கிய ரூ.5 லட்சம் குட்கா பொருட்கள் பறிமுதல்!

 

தனியார் குடோனில் பதுக்கிய ரூ.5 லட்சம் குட்கா பொருட்கள் பறிமுதல்!

விருதுநகர்

சிவகாசியில் தனியார் குடோனில் பதுக்கி வைத்திருந்த 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா புகையிலை பொருட்களை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்..

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக வருவாய்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், சிவகாசி கவிதா நகரில் உள்ள தனியாருக்கு சொந்தமான குடோனில் வருவாய் துறையினர் மற்றும் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

தனியார் குடோனில் பதுக்கிய ரூ.5 லட்சம் குட்கா பொருட்கள் பறிமுதல்!

சோதனையின்போது, குடோனில் இருந்த 10-க்கும் மேற்பட்ட மூட்டைகளில் குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து, அங்கிருந்த சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அந்த குடோனுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

மேலும், குட்காவை பதுக்கியது தொடர்பாக குடோன் உரிமையாளர் கருப்பசாமி பாண்டியன் உள்ளிட்ட இருவர் மீது சிவகாசி நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.