அந்தியூரில் போலீஸ் பறிமுதல் செய்த ரூ.5 லட்சம் வெளிமாநில மதுபாட்டில்கள் அழிப்பு!

 

அந்தியூரில் போலீஸ் பறிமுதல் செய்த ரூ.5 லட்சம் வெளிமாநில மதுபாட்டில்கள் அழிப்பு!

ஈரோடு

அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஊரடங்கு காலத்தில் பறிமுதல் செய்த ரூ.5 லட்சம் மதிப்பிலான வெளி மாநில மதுபாட்டில்களை பொக்லைன் இயந்திரம் மூலம் அதிகாரிகள் அழித்தனர்.


ஈரோடு மாவட்டம் அந்தியூர் தொகுதிக்குட்பட்ட வெள்ளித்திருப்பூர், பர்கூர், அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஊரடங்கு காலத்தில் கர்நாடக மாநிலத்தில் இருந்து அனுமதியின்றி கடத்திவரப்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, பர்கூர் காவல் நிலையத்தில் 9 வழக்குகளும், அம்மாபேட்டை காவல் நிலையத்தில் 5 வழக்குகளும், வெள்ளித்திருப்பூர் காவல் நிலையத்தில் 7 வழக்குகளும், அந்தியூர் காவல் நிலையத்தில் 9 வழக்குகளும் என மொத்தம் 30 வழக்குகள் பதியப்பட்டு உள்ளது.

அந்தியூரில் போலீஸ் பறிமுதல் செய்த ரூ.5 லட்சம் வெளிமாநில மதுபாட்டில்கள் அழிப்பு!

இந்த வழக்கின் அடிப்படையில் பர்கூரில் ஆயிரத்து 721 மதுபாட்டில்களும், அம்மாபேட்டையில் ஆயிரத்து 26 மதுபாட்டில்களும், வெள்ளித்திருப்பூரில் 558 மதுபாட்டில்களும், அந்தியூரில் 138 மதுபாட்டிகளும் என மொத்தம் ரூ.5 லட்சம் மதிப்பிலான 3 ஆயிரத்து 443 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பறிமுதலான மது பாட்டில்களை நேற்று அந்தியூர் பெரிய ஏரி பகுதியில் கோபி கலால் வட்டாட்சியர் ஷீலா முன்னிலையில், அந்தியூர் காவல் ஆய்வாளர் செந்தில், பர்கூர் உதவி ஆய்வாளர் ஜான் பொன்னையா ஆகியோர் தலைமையில் பொக்லைன் இயந்திரம் உதவியுடன் அழிக்கப்பட்டது.