சென்னையில் ரூ.5 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல் – இருவர் கைது

 

சென்னையில் ரூ.5 கோடி  போதைப்பொருட்கள் பறிமுதல் – இருவர் கைது

சென்னை

சென்னையில் இருந்து கத்தாருக்கு கடத்தமுயன்ற 5 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

சென்னையில் இருந்து கத்தார் தலைநகர் தோகாவுக்கு போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் விமான சரக்கக ஏற்றுமதி தளத்தில் இருந்த 55 டிஜிட்டல் எடை கருவிகளை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

சென்னையில் ரூ.5 கோடி  போதைப்பொருட்கள் பறிமுதல் – இருவர் கைது

கருவிகளின் எடை வழக்கத்தை விட கூடுதலாக இருந்ததால் அவற்றை பிரித்து சோதனையிட்டனர். அப்போது, 44 எடை கருவிகளுக்குள் தலா ஒரு கிலோ வீதம் 44 கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

மற்ற கருவிகளில் இருந்து 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான மெத்தபிடமைன் போதை மாத்திரைகள் மற்றும் தடை செய்யப்பட்ட பிரிகாபாலின் மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தனியார் ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் மற்றும் அவருக்கு உதவிய சுங்க அதிகாரியையும் கைதுசெய்தனர்.