கோவையில் உரிய ஆவணமின்றி எடுத்துச்சென்ற ரூ.5.56 லட்சம் பறிமுதல்!

 

கோவையில் உரிய ஆவணமின்றி எடுத்துச்சென்ற ரூ.5.56 லட்சம் பறிமுதல்!

கோவை

கோவையில் உரிய ஆவணமின்றி வாகனத்தில் எடுத்துச்சென்ற 5 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் பணத்தை, பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

கோவை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தடாகம் சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே இன்று தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை மறித்து சோதனை செய்தனர்.

கோவையில் உரிய ஆவணமின்றி எடுத்துச்சென்ற ரூ.5.56 லட்சம் பறிமுதல்!

சோதனையின் போது, அவர் தனது வாகனத்தில் 5 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அந்த நபரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் கோவையை சேர்ந்த கார்த்திகேயன் என்பதும், கொண்டு சென்ற பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததும் தெரிவயவந்தது.

இதனை அடுத்து, அவரிடம் இருந்த பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அதனை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.