எம்.எல்.ஏ.வுக்கு ரூ.35 கோடி பணம் விவகாரம்… என் நம்பகத்தன்மையை தாக்கும் நோக்கம் கொண்டது.. சச்சின் பைலட்

 

எம்.எல்.ஏ.வுக்கு ரூ.35 கோடி பணம் விவகாரம்… என் நம்பகத்தன்மையை தாக்கும் நோக்கம் கொண்டது.. சச்சின் பைலட்

ராஜஸ்தான் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கிரிராஜ் சிங் மலிங்கா, சச்சின் பைலட் மீது பகீர் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். ராஜ்யசபா தேர்தலுக்கு முன் சச்சின் பைலட் என்னிடம் மாநிலங்களை தேர்தலில் காங்கிரஸ் போடாமல் இருக்க ரூ.35 கோடி தருவதாக கூறினார். நான் உடனே இந்த தகவலை முதல்வர் அசோக் கெலாட்டிடம் தெரிவித்தேன் என கிரிராஜ் சிங் மலிங்கா தெரிவித்தார். ஆனால் இந்த குற்றச்சாட்டை சச்சின் பைலட் மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:

எம்.எல்.ஏ.வுக்கு ரூ.35 கோடி பணம் விவகாரம்… என் நம்பகத்தன்மையை தாக்கும் நோக்கம் கொண்டது.. சச்சின் பைலட்

இது போன்ற ஆதாரமற்ற மற்றும் மோசமான குற்றச்சாட்டுகள் எனக்கு எதிராக சுமத்தப்படுவதில் நான் வருத்தப்படுகிறேன். ஆனால் ஆச்சரியப்படுவதில்லை. இந்திய தேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. மற்றும் உறுப்பினர் என்ற முறையில், மாநிலத்தின் தலைமைக்கு எதிரான நான் எழுப்பிய கவலைகளை தடுப்பதற்கும், என்னை இழிவுபடுத்துவதற்கும் மட்டுமே இது போன்ற குற்றச்சாட்டுகள் சொல்லப்படுகிறது.

எம்.எல்.ஏ.வுக்கு ரூ.35 கோடி பணம் விவகாரம்… என் நம்பகத்தன்மையை தாக்கும் நோக்கம் கொண்டது.. சச்சின் பைலட்

இந்த முயற்சி என்னை மேலும் அவதூறு செய்வதையும், எனது நம்பகத்தன்மையை தாக்குவதையும் நோக்கமாக கொண்டுள்ளது. முக்கிய பிரச்சினைகளை திசை திருப்ப இந்த கதை திருப்பி விடப்படுகிறது. இந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்த எம்.எல்.ஏ. மீது நான் பொருத்தமான மற்றும் கண்டிப்பான சட்ட நடவடிக்கைகளை எடுப்பேன். எனது பப்ளிக் இமேஜ் மீது அபத்தங்களை ஏற்படுத்த இது போன்ற குற்றச்சாட்டுக்ள என் மீது வீசப்படும் என என்று நான் நம்புகிறேன். ஆனால் நான் தடையின்றி உறுதியாக இருப்பேன், என் நம்பிக்கை மற்றும் நம்பிக்கைகளில் உறுதியா இருப்பேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.