விபத்தில் இறந்த எஸ்.எஸ்.ஐ குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் நிவாரணம்… மத்திய மண்டல ஐ.ஜி. வழங்கினார்…

 

விபத்தில் இறந்த எஸ்.எஸ்.ஐ குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் நிவாரணம்… மத்திய மண்டல ஐ.ஜி. வழங்கினார்…

திருச்சி

திருச்சியில் விபத்தில் உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளரின் குடும்பத்திற்கு 30 லட்சம் ரூபாய் காப்பீட்டு தொகையை மத்திய மண்டல ஐ.ஜி., ஜெயராம் வழங்கினார்.

திருச்சி மாவட்டம் பெல் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்தவர் ஜெயக்குமார். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். ஜெயக்குமாருக்கு இரு பெண்கள் மட்டுமே இருந்ததால், அவருடைய குடும்பத்திற்கு நிவாரணம் பெற்றுத்தர மத்திய மண்டல ஐ.ஜி ஜெயராம் தாமாக முன்வந்து முயற்சி மேற்கொண்டார்.

விபத்தில் இறந்த எஸ்.எஸ்.ஐ குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் நிவாரணம்… மத்திய மண்டல ஐ.ஜி. வழங்கினார்…

அதன் பயனாக திருச்சி காமராஜபுரம் பாரத ஸ்டேட் வங்கி கிளையின் மூலம் காவலர்களுக்கான வங்கி கணக்கில் வழங்கப்படும் 30 லட்சம் காப்பீட்டு தொகை கிடைக்கப்பெற்றது. இதனையொட்டி, இன்று நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயக்குமாரின் மனைவி மற்றும் இரு மகள்களிடம், 30 லட்சம் ரூபாய் காப்பீட்டு தொகைக்கான காசோலையை ஐ.ஜி., ஜெயராம் வழங்கினார்.

பின்னர் போலீசார் மத்தியில் பேசிய அவர், திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள அனைத்து காவலர்களும், காவல் அதிகாரிகளும் தங்களுடைய வங்கி கணக்கை பாரத ஸ்டேட் வங்கியில் காவலர்களுக்கான வங்கி கணக்கு திட்டத்தில் உள்ளதா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். அவ்வாறு இல்லாதபட்சத்தில் இந்த திட்டத்தில் தங்களின் வங்கிக் கணக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் எஸ்.பி.ஐ வங்கி திருச்சி மண்டல மேலாளர் சபீரா பர்வீன், குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் பாரிமன்னன் ஆகியோர் உடனிருந்தனர்