கோவையில் உரிய ஆவணமில்லாத ரூ.3.75 லட்சம் பறிமுதல்!

 

கோவையில் உரிய ஆவணமில்லாத ரூ.3.75 லட்சம் பறிமுதல்!

கோவை

கோவையில் கோழிப்பண்ணை ஊழியரிடம் இருந்து உரிய ஆவணமில்லாத 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த சிந்தாமணிபுதூர் சுங்கச்சாவடி பகுதியில் நேற்று தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அந்த வழியாக கேரளாவில் இருந்து பெருந்துறைக்கு முட்டை ஏற்றி வந்த லாரியை மறித்து சோதனையிட்டனர்.

கோவையில் உரிய ஆவணமில்லாத ரூ.3.75 லட்சம் பறிமுதல்!

அதில், லாரியில் 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வாகன ஓட்டியிடம் விசாரித்தபோது, அவர் பெருந்துறையை சேர்ந்த கோழிப்பண்ணை ஊழியர் கார்த்தி என்றும், கேரளாவில் முட்டை டெலிவரி செய்துவிட்டு பணத்தை கொண்டு வந்ததாகவும் தெரிவித்தார்.

ஆனால் அதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அவரிடம் இருந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, பறிமுதலான பணத்தை சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.