பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.200 அபராதம்!

 

பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.200 அபராதம்!

கடந்த 5 மாதமாக முடங்கி கிடந்த மக்களை கட்டவிழுத்து விடும் வகையில் செப்.1 ஆம் தேதி முதல் ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டன. கொரோனா பாதிப்புகள் குறையாத சூழலில் அரசின் வழிமுறைகளை மக்கள் கடைபிடிப்பார்களா? கொரோனா கட்டுக்குள் வருமா? போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் கொரோனா விதிமுறைகளான பொது இடங்களில் தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிதல் உள்ளிட்டவற்றை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் வகையில் பொது சுகாதார சட்டத்தில் தமிழக அரசு திருத்தம் கொண்டுவந்துள்ளது. இந்த அவசர சட்டத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார்.

பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.200 அபராதம்!

இதனையடுத்து தமிழகத்தில் பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்றும், பொது இடங்களில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்தால், எச்சில் துப்புதல் உள்ளிட்ட கொரோனா தனிமைப்படுத்துதல் விதிமுறைகளை மீறினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத சலூன் மற்றும் ஸ்பா ஆகியவற்றிற்கு ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.