திருச்சி விமான நிலைய கழிவறையில் வீசப்பட்ட ரூ.20 லட்சம் தங்கம் பறிமுதல்

 

திருச்சி விமான நிலைய கழிவறையில் வீசப்பட்ட ரூ.20 லட்சம் தங்கம் பறிமுதல்

திருச்சி

திருச்சி விமான நிலைய கழிவறையில் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் கழிவறையை நேற்று ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள கழிவறை ஒன்றில் தங்க நகைகள் இருப்பதை கண்ட அவர்கள் இதுகுறித்து சுங்கத்துறை அகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

திருச்சி விமான நிலைய கழிவறையில் வீசப்பட்ட ரூ.20 லட்சம் தங்கம் பறிமுதல்

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் சுமார் 399 கிராம மதிப்பிலான தங்க செயின் உள்ளிட்ட நகைகளை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு சுமார் 20 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, இந்த நகைகள் எங்கிருந்து கடத்திவரப்பட்டது என்றும், அதனை கழிவறையில் வீசிச் சென்ற பயணி குறித்தும் விமான நிலைய அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.