சாத்தான்குளத்தில் உயிரிழந்த தந்தை, மகன் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்- தமிழக அரசு

 

சாத்தான்குளத்தில் உயிரிழந்த தந்தை, மகன் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்- தமிழக அரசு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காமராஜ் சிலைக்கு வடபுறத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ். இவர் கடந்த 20 ஆம் தேதி முழு பொதுமுடக்கம் நடைமுறைகளை மீறி நீண்ட நேரம் கடையை திறந்து வைத்திருந்ததாக தெரிகிறது. இதனால் சாத்தான்குளம் போலீசார் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜை விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணனும், ரகுகணேஷ் ஆகிய இருவரும் கூட்டாகச் சேர்ந்து தந்தை மகன் இருவரையும் கடுமையாகத் தாக்கியதுடன், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்கு பதிவு செய்து கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர். இதையடுத்து காயம் காரணமாக ஜெயராஜ் மருத்துவச் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதை தொடர்ந்து கோவில்பட்டி கிளைச்சிறையில் இருந்த பென்னிக்ஸ் நேற்றிரவு உயிரிழக்க, ஜெயராஜ் மருத்துவமனையில் இன்று காலை பலியானார். போலீசாரின் தாக்குதலால் தான் இரண்டு உயிரிழப்புகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சாத்தான்குளத்தில் உயிரிழந்த தந்தை, மகன் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்- தமிழக அரசு
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி, “காவல் உதவி ஆய்வாளர்கள் 2 பேர், தலைமைக் காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தில் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சாத்தான்குளத்தில் உயிரிழந்த தந்தை, மகன் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்,மேலும், அக்குடும்பத்தில் அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு தகுதிக்கேற்ப ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்.” என தெரிவித்தார்.