கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

 

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகம் எடுத்து வரும் நிலையில் புதுச்சேரி மாநிலத்திலும் நாளுக்கு நாள் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதனால் அங்கு முதல்வர் நாராயணசாமியின் உத்தரவின் படி புதிய கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகிறது. இருப்பினும் அங்கு பாதிப்பு அதிகரித்த வண்ணமே உள்ளது. இதனிடையே புதுச்சேரி மாநில சட்டப்பேரவையில் ஜூலை 30க்குள் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய அம்மாநில அரசு முடிவெடுத்ததால் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

இந்த நிலையில் இன்று சட்டப்பேரவையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். கொரோனா பொது நிவாரண நிதிக்கு ரூ.9.16 கோடி வந்துள்ளதாகவும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருக்கும் குடும்பத்துக்கு ரூ.700 மதிப்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.