ராயபுரத்தில் 4 ஆயிரத்தை எட்டியது கொரோனா பாதிப்பு!

 

ராயபுரத்தில் 4 ஆயிரத்தை எட்டியது கொரோனா பாதிப்பு!

சென்னையில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. சென்னையில் மட்டுமே கிட்டத்தட்ட 23 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ராயபுரம், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தான் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்து வரும் நிலையிலும், கொரோனா பரவுவது குறைந்ததாக இல்லை. அதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தி 5 அமைச்சர்கள் கொண்ட குழுவை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

ராயபுரத்தில் 4 ஆயிரத்தை எட்டியது கொரோனா பாதிப்பு!

இந்த நிலையில் சென்னை கொரோனா பாதிப்பின் மண்டலவாரி விவரத்தை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில், ராயபுரத்தில் அதிகபட்சமாக 4023 பேரும் , தண்டையார்பேட்டையில் 3019 பேரும் , திரு.வி.க நகரில் 2,273 பேரும் , அண்ணா நகரில் 2,068 பேரும் தேனாம்பேட்டையில் 2,646 பேரும் , கோடம்பாக்கத்தில் 2,539 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் மொத்தமாக 23,298 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.