பிரபல ரவுடியை நண்பர்களே கொன்று புதைத்த கொடூரம்: அதிர வைக்கும் காரணம்!

 

பிரபல ரவுடியை நண்பர்களே கொன்று புதைத்த கொடூரம்: அதிர வைக்கும் காரணம்!

ஸ்ரீரங்கத்தில் காணாமல் போன ரவுடி நவீன்குமார் நண்பர்களால் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கம் சங்கர் நகர் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி நவீன் குமாரை கடந்த 8ம் தேதியில் இருந்து காணவில்லை. தனது நண்பர்களுடன் மது அருந்த சென்ற நவீன்குமார் வீடு திரும்பவில்லை என அவரது தந்தை ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் நவீன் குமாரின் நண்பர்களிடம் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டனர். அதில் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

பிரபல ரவுடியை நண்பர்களே கொன்று புதைத்த கொடூரம்: அதிர வைக்கும் காரணம்!

எனினும், நவீன்குமாரின் நண்பர்கள் மீது சந்தேகமடைந்த போலீசார் நேற்று மீண்டும் விசாரணையை தொடங்கினர். அப்போது, கடந்த 8ஆம் தேதி நவீன்குமார் தனது நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்த போது தகராறு ஏற்பட்டதும் அவரது நண்பர்களே அவரைக் கொன்று கொள்ளிடக்கரையில் புதைத்ததும் வெளிச்சத்துக்கு வந்தது. இச்சம்பவம் தொடர்பாக 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், நவீன்குமாருடன் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களின் மனைவிகளை மிரட்டி உறவு வைத்துக் கொண்டதாலும் பலமுறை எச்சரித்தும் நவீன்குமார் தொடர்ந்து அதனை செய்து வந்ததாலும் அவரைக் கொன்று புதைத்ததாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். இக்காரணம் போலீசாரை அதிர வைத்துள்ளது.

பிரபல ரவுடியை நண்பர்களே கொன்று புதைத்த கொடூரம்: அதிர வைக்கும் காரணம்!

பின்னர், கொள்ளிடக்கரை பகுதியில் புதைக்கப்பட்ட நவீன்குமாரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அது நவீன்குமாரின் சடலம் தான் என உறுதி செய்யப்பட்டதையடுத்து கைது செய்யப்பட்ட 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.