திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், காதல் ஜோடி தற்கொலை!

 

திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், காதல் ஜோடி தற்கொலை!

தேனி

குமுளியில் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல்ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் அருகே கேரள எல்லையில் அமைந்துள்ள குமுளியை சேர்ந்தவர் தினேஷ் (24). இவர் பெயிண்டர் வேலைக்கு சென்று வந்தார். இவருக்கு, எட்டாம் மைல் பகுதியில் உள்ள தனியார் ஆய்வகத்தில் பணிபுரியும் அபிராமி(20) என்பவருடன்பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறி உள்ளது. இவர்கள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக காதலித்து வந்துள்ளனர்.இந்த நிலையில், காதல் விவகாரம் அறிந்த இருவரது பெற்றோர்களும் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், காதல் ஜோடி தற்கொலை!

இதனால் வாழ்வில் விரக்தியடைந்த தினேஷும், அபிராமியும், தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து உள்ளனர். இதனையடுத்து, நேற்று காலை குமுளி பேருந்து நிலையம் பகுதியில் தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கிய அவர்கள், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். நீண்ட நேரமாக அறைக்கதவு திறக்காததால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள், கதவை உடைத்துச் சென்று பார்த்தபோது, தினேஷும், அபிராமியும் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தனர்.

இதுகுறித்து விடுதி ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில், குமுளி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து குமுளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.