கண்ணீர் விட்டு அழுத டெலிவரி பையன் – மனிதநேயத்துடன் நடந்து கொண்ட வழிப்பறி திருடர்கள்: வைரல் வீடியோ
கராச்சி: டெலிவரி பையன் அழுததால் அவனிடம் வழிப்பறி செய்த பொருட்களை திருடர்கள் அவனிடமே கொடுத்த சம்பவத்தின் வீடியோ வைரல் ஆகி வருகிறது.
இணையத்தில் பல வீடியோக்கள் அதன் தனித்துவமான உள்ளடக்கம் காரணமாக அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகும். சில வீடியோக்கள் மனிதநேயத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கும். பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து இதுபோன்ற ஒரு வீடியோ அதே காரணத்திற்காக சமூக வலைதளங்களில் வைரலாக பலரால் பகிரப்பட்டு வருகிறது.
WATCH: CCTV footage of robbers in #Karachi consoling #food delivery man and returning his valuables after he breaks down into tears goes #viral.
For more: https://t.co/sjyrWUXJoc pic.twitter.com/GsgmurCNAw
— The Express Tribune (@etribune) June 16, 2020
கராச்சியில் ஒரு வீட்டில் உணவை டெலிவரி கொடுத்து விட்டு தன்னுடைய பைக்குக்கு அருகில் ஒரு பையன் வருகிறான். அப்போது அந்த வழியாக பைக்கில் வரும் வழிப்பறி திருடர்கள் அந்த பையனிடம் இருந்து பணம், விலை மதிப்புள்ள பொருட்களை மிரட்டி பறிக்கின்றனர். இதையடுத்து அந்த டெலிவரி பையன் கண்ணீர் விட்டு அழத் தொடங்குகிறான். இதைக் கண்டு இரக்கப்பட்டு அந்த திருடர்கள் அந்த பையனிடம் வழிப்பறி செய்த பொருட்களை அவனிடமே கொடுத்து விடுகின்றனர். அத்துடன் அவனை தேற்றி கட்டிப்பிடித்து, கைகுலுக்கி விட்டு விடைபெறுகின்றனர். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் உள்ளம் நெகிழ்ந்து பலருக்கும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.